இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர் பாடசாலையின் நிதியுதவிக் கோரிக்கை.
உலகெங்கும் பரந்து வாழும் எம் அன்பு உறவுகளே!
மேற்படி விடயம் தொடர்பாக இடைக்காடு இணையத்தில் நாம் குறிப்பிட்டதற்கமைய இத்தொகையானது இலங்கையிலுள்ள வங்கியில் வைப்பில் இடப்பெற்று அதில் இருந்து கிடைக்கும் வட்டியை எடுத்துத்தான் அவர்களுக்கான ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
இதுவரை காலமும் முன்பள்ளியானது எம்மிடம் எந்தவொரு நிதிக் கோரிக்கையையும் வைக்கவில்லை, தற்போதைய சூழ்நிலையில் அவர்களால் இதனைத் தவிர வேறு வழி அவர்களுக்கு இருக்கவில்லை. நாமும் தொடர்ந்து வருடாவருடம் நிதி சேகரிப்பில் ஈடுபடமுடியாது, இதுவே முதலும் கடைசியுமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றோம் , எனவே கணிசமான தொகை ஒன்றை வைப்பில் இடுவதன் மூலம் மீண்டும் ஒரு நிதிக் கோரிக்கை எழாதவாறு செய்ய வேண்டும் என்பதே எமது முடிவாகும்,
அப்படி சிறந்து
விளங்கிய பாலர் பாடசாலை covid-19 காரணமாக செயல்படாததால் அங்கு பணியாற்றும்
ஆசிரியப் பெருந்தகைகளுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகவும்
வேதனைக்குரிய விடயமாகும்.
இரண்டு ஆசிரியர்கள் 8000-00 ரூபா ஊதியத்தில் கடமையாற்றினார்கள். பிள்ளைகளின் வரவு
அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும், மற்ற இரு ஆசிரியைகளின் விடுமுறை நாட்களை ஈடு
செய்யவும், மற்றும் மூன்றாவது ஆசிரியையின் குடும்ப சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு
மூன்றாவது ஆசிரியை நியமிக்கப்பட்டார், அரசினால் இரு ஆசிரியர்களுக்கு 6000-00 ரூபாவுடன்,
நிர்வாகத்தால் வழங்கப்படும் 8000-00 சேர்த்து 14000-00 உம், மூன்றாவது ஆசிரியைக்கு 8000-00
ம் வழங்கப்படுகிறது, எனவே மாதம் 24000-00 தேவைப்படுகின்றது, பிள்ளைகளின் பெற்றாரால்
வழங்கப்படும் நிதி நாளாந்த நடைமுறைச் செலவிற்குதான் போதுமானதாக உள்ளது.
இந் நிலை நீடிக்குமாயின் அந்த ஆசிரியர்கள் அதனைவிட்டு விலக நேரிடும், அவ்வாறு அவர்கள்
விலகினால் எம் இளம் சிறார்களின் கல்வி பாதிக்கப்படும், மாணவச்செல்வங்களும் பிறிதொரு
இடத்திற்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும், இவ்வாறான நிலைமை தொடருமானால் இந்த
பாலர் பாடசாலை கைவிடப்பட வேண்டிய நிலை உருவாகும். இதனால் பாதிக்கப்படுவது எமது
சந்ததியினராகும்
அதனை புலம் பெயர் மக்களாகிய நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?,
இல்லையாயின் நாம் அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் அதற்கான நிதிக்
கோரிக்கையை அவர்கள் விடுத்துள்ளார்கள் ,இணைப்பை பார்க்கவும்.
எனவே புலம் பெயர் உறவுகளே!
உங்கள் நாடுகளில் நீங்கள் இணைந்து நிதியினை சேகரித்து e transfer ஊடாக அவர்களுக்கு அனுப்பி
உதவுமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.
தொடர்புகளுக்கு;
இ. செல்வறாஜ் 647 407 8358. kapilan@rogers.com
வை பொன்னீஸ்வரன் 416 409 6521. vponnes@hotmail.com
நா. மகேசன் 416 949 1815
வே. இளங்கோ 416 909 1107. elangovelupillai@gmail.com
ச. பரமசிவம் 1 514 617 3150
நா. மகேந்திரம் 1 514 886 8659
சி. குணம் (சுவிஸ் ) …
நல்லதம்பி சரஸ்வதி(கண்ணம்மா)
தோற்றம்: 10/01/1936 மறைவு: 22/02/2021
காளி கோவிலடி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி சரஸ்வதி(கண்ணம்மா) அவர்கள் இன்று 22/02/2021 திங்கள்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-கதிராசி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற நல்லதம்பியின் அன்பு மனைவியும் நடராசா, சோமசுந்தரம், திருநாவுக்கரசு, நல்லம்மா, சின்னப்பு, சின்னம்மா, கந்தசாமி, இலக்குமிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும் பேபி வத்சலா, ஸ்ரீராகவன், ஸ்ரீதரன், சசிகலா, காலஞ்சென்றவர்களான ஸ்ரீநிவாசகன், உதயசங்கர் (இந்தி) மற்றும் சத்தியகலா, விஜிதகலா, ஆறுமுகஸ்ரீ,, சிவராம் (வசந்தி) ஆகியோரின் அன்புத்தாயாரும், பரமேஸ்வரன், இந்திராணி, காலஞ்சென்ற பவானி மற்றும் ஸ்ரீமனோகரன், ஜெயந்தா உதயகுமார், ஜெயசீலன், மிசேல் (Michelle) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் நாளை 23/02/2021 செவ்வாய்க்கிழமை இடம்பெற்று பூதவுடல் இடைக்காடு சாமித்திடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு;
விஜி, சீலன்: + 44 1793 542564
சசி: +49 151 29768806
சத்தியகலா: +41 794361838
ஸ்ரீராகவன்:+45 71322667
ஸ்ரீதரன்(சிவா)+33 751236363
சிவராம்: +39 3496245646
ஆறுமுகஸ்ரீ: +44 7990726609
கண்ணகை ஆழ்வார் ஆசிரியை100வது பிறந்த நாள் 17January 1921 -இடைக்காடு (மாதர்சங்கம்). ❤️இவர் சிறுவர் பாடசலை, தையல் வகுப்பு அன்பான ஆசிரியையாக கடமை ஆற்றினார்.
எங்கள் ஊர் மக்களுடன் அன்பானவராகவும் மிகவும் தெரிந்தவராகவும் அறியப்பட்டார். எங்களது உறவிரானதும் ஆசிரியையும் ஆசையம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இவர் மறைந்தாலும் இவருடைய புகழ் மறையாது.
எமது ஊரில் முதன்முதலாக முன்பள்ளியைத தொடங்கி நடத்தியவர். பெண்களுக்கு தையல் பழக்கியவர். மாதர் சங்கத்தை அங்குரார்ப்பணம் செய்து நடத்தியவர்.
நித்திய சாந்தி அளித்தருளும் இறைவா!ஓம் சாந்தி ஓம் சாந்தி
கண்ணகை உந்தன் பெயர்
என்றும்
கண்டதில்லை உன்கையில்
பொன்னகை – நாளும்
கண்டோம் உன் வதனத்தில்
புன்னகை
வெள்ளை மனதுடனும்
வெண்ணரைத் தலையுடனும்
வெண்ணிற உடையும் கொண்டு
அகர முதல எழுத்தும்
ஆத்திசூடியும்
மருதமலை மாமணியும்
எமக்களித்த ஔவை
நம் கரம் பிடித்து
விரல் மடித்து
கரும்பலகையிலும்
கற்பலகையிலும்
கன்னித்தமிழ் அளித்த
கலையரசி
பல்துலக்கி முகம் கழுவி
பாங்காய் மடியிருத்தி
பாடம் புகட்டிய
தமிழ்த்தாய்
நாம் பேசும் தமிழுக்கும்
எழுதும் எழுத்துக்கும்
ஏகபோக சொந்தக்காரி
அகரம் அறியவைத்த சிகரமே
எழுத்தறிவித்த தெய்வமே
ஏடுதந்த ஏந்தலே
என்றும் உன் நினைவு
எங்களுள் வாழும்
அன்னாரின் மறைவையொட்டி வெளியிடப்பட்ட அஞ்சலி
கவிதை உதவி_ வை. பவான்
மரண அறிவித்தல்
திருமதி சின்னத்தம்பி
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னத்தம்பி இன்று அதிகாலை காலமானார். இவர் அமரர் ஆசிரியர் சின்னத்தம்பியின் பாசமிகு மனைவியும் நித்தியானந்தன் பவானி அருந்ததி சுரமஞ்சரி கலையரசி அருள்மொழி சிவமலர் ஆகியோரின் பாசமிகு அம்மாவும்ஆவார். இறுதிக்கிரியைகள் இடைக்காட்டில் இன்று நடைபெற்றன.
நித்திய சாந்தி அளித்தருளும் இறைவா!ஓம் சாந்தி ஓம் சாந்தி
Moreதை பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்
விடியற்காலை எழும்போதே
விளையும் நிலம் மனதில் கொண்டு….
தனித்து நின்று செய்யாமல்
தமிழர் கூடி ஒன்றினைந்து…
சேற்றில் காலை வைத்து என்றும்
சோற்றை நமக்குத் தருகின்ற
கண்ணில் காணும் கடவுள் என்றால்
உழவர் அன்றி உலகில் வேறு யார்…?
காலைக் கதிரவன் உதிக்கும் போதே
கவிழ்ந்த நெற்குளை நிமிர்ந்து ஆடும்
அழகு மணிகளால் அசைந்து பாடும்….
அவ்விளைந்த நெற்மணி வீடு சேற…
தைமகள் அவளைத் தாங்கிக் கொள்ள
மாக்கோலமிட்ட மண்மணப் பானை
மகிழ்ச்சியில் அவளை ஏந்திக் கொள்ள…
புத்தம்புதுப் பானையில் பால்போல
அவள் பொங்கி வர…
அவளைப் பார்க்க ஆசை கொண்டு
கொம்பு நிறைய பூ சுற்றி….
பட்டு வேட்டிக் கழுத்தில் கட்டி
நெற்றிச் சுட்டிப் பொட்டு வைத்து
எங்கள் வீட்டுச் செல்வமாக
ஏறுபூட்டி காளை நிற்க..
உழவு காக்கும் விவசாயி
உறக்கச் சொல்லிக் குலவையிட
பால்பானை மெல்லப் பொங்க
பொங்கலோ பொங்கல் என்று சொல்லி
தைமகளை வரவேற்போம்….
நன்றி
வரிகள்,
மாங்கனி சந்தோஷ்
உலகெங்கும் பரந்து வாழும் எம் இடைக்காடு இணையத்தள வாசகர்கள் நண்பர்களுக்கு இனிய 2021 வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்,
வருகின்ற புத்தாண்டில் ” பழையன கழிதலும் புதியன புகுதலும் “ என்பதற்கிணங்க கடந்த வருட கசப்பான சம்பவங்கள், நிகழ்வுகள் யாவும் நீங்கி புத்துணர்வுடனும் உற்சாகத்துடனும் புதிய ஆண்டினை வரவேற்று ,வருகின்ற ஆண்டில் எல்லா நலன்களும் ,நல்வாழ்வு, சுபீட்சம், கல்வி, செல்வம். நோயற்றவாழ்வு, நல்லாரோக்கியம் என எல்லா சுகங்களும் கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி எமது கருமங்களை தொடங்குவோம்,
கடந்த 15 ஆண்டுகளாக உங்களுடன் பயணித்து உங்களுக்கான சேவையில் நாமும் இணைந்து பல்வேறு தரப்பட்ட கட்டுரைகள் படங்கள், செய்திகள் , அறிவித்தல்கள், வாழ்த்து மடல்கள், போன்ற பயனுள்ள விடயங்களை இடைக்காடு இணையத்தில் பிரசுரித்தும், உங்களின் முக்கியமான அறிவித்தலை உலகெங்கும் பரந்து வாழும் எம் உறவுகளுக்கு உடனுக்குடன் எவ்வித தாமதமுன்றி கொண்டுபோய் சேர்த்தும் உங்களின் ஆக்கங்களை அவ்வப்போது பிரசுரித்து உங்களின் எழுத்தாற்றலை மேம்படுத்தும் விதமாக செயல்பட்டும் வந்திருக்கிறோம் என்பதில் நாம் பெருமிதமடைகிறோம்,
நடப்பு வருடத்தில் இதனை மேலும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இடைக்காடு இணையம் புதுப் பொலிவுடனும் புது வடிவத்திலும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் உங்களின் கருத்துக்கள் ஆலோசனைகள் என்பன இடம்பெறும் வகையிலும் புனரமைக்கப்பட்டு இன்று உங்கள் முன் வருகின்றது.
கடந்த 15 வருடங்களாக நீங்கள் வழங்கிய அன்பிற்கும் ஆதரவிற்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதோடு இனி வருகின்ற காலங்களிலும் உங்களின் அன்பும் ஆதரவும் என்றும் கிடைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு புதிய வடிவத்திலான இணையத்தளத்தை இன்றிலிருந்து உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.
இந்த இணையத்திற்கான மென்பொருள் வடிவமைப்பிற்கு உதவி புரிந்த தர்சிகா முருகவேல் ( நியூ சீலந்த்து), ஓவிய வடிவமைப்பு செய்து தந்த வன்னியகுலசிங்கம் சின்னதம்பி (இத்தாலி) அவர்களுக்கு நன்றிகள்.
என்றும் உங்கள் பணியில்
வே. இளங்கோ.
கனடா
01-01-2021.
விழி நீர் சொரிய
விம்மலுடன் என்
கண்ணீர் பூக்களை
காணிக்கையாக்குகின்றேன்
உறவால் நாம் இணைந்திருந்தாலும்
உள்ளத்தால்
எமை இணைத்தவள்
அன்னை புவனேஸ்வரியே
அதனால் தான் அவசரமாய்
அன்னை உனை அழைத்தாளோ!
ஆண்டுக்கு ஒரு முறை
அன்னையின் திருவிழா
அது பெருவிழா
வேட்டைத் திருவிழா
அது வேடிக்கைத் திருவிழா
ஆடிடும் இளைஞர் கூட்டம்
சேர்ந்தே ஆடிடுவாயே
இனி எப்போது காண்போம்
அந்த இனிய காட்சியை !
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை
அழைத்திடும் தொலைபேசி
அதிரும் குரல் அது
அன்பின் அடையாளம்
ஒருநாள் தவறின்
பதற்றமாய் வரும் அழைப்பு
என்ன சுகவீனமா என
உரிமையோடும் உறவோடும்
இனி யாரையா எனை கேட்பார் !
எல்லா விடையத்தைம்
என்னோடு பகிர்ந்து கொள்வாயே
இறுதிப் பயணத்தை மட்டும்
சொல்ல மறந்தாயோ
வருவேன் என்றுதானே
சொல்லி விட்டுப் போனாய்
வருவாய் என்றுதானே
நானும் காத்திருந்தேன்
எத்தனை பணிகள்
எமக்காய் அங்கே காத்திருக்க
எல்லாவற்றையும் செய்து
முடிப்போம் என்றாயே
இனி எப்படி செய்வது
ஏதுமறியாது தவிக்கின்றேன்
எழுந்து வரமாட்டாயா
என ஏங்குகின்றேன்
வரமாட்டாய் என
தெரிந்தும் என்மனம்
ஏங்குகின்றதே
என் செய்வேன்!
விண்ணுலகு ஏகிய வேந்தனே
உன் ஆன்மா நித்திய நிலைபெற
வேண்டி நின்றேன்
வேறேதும் வேண்டேன்!
நா.இ.ஈசுவரன்.
கனடா
27-12-2020.
மரண அறிவித்தல்
வல்லிபுரம் இராஜலட்சுமி இறைபதமடைந்தார்
கொற்றவளவு இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும்
கொண்ட வல்லிபுரம்
இராஜலட்சுமி 28-12-2020 திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் இறைபதமடைந்தார்.
அன்னார் காலம் சென்ற வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும், ஜெயமங்களம், காலம்
சென்ற ஜெயபாலன், ஜெயவரதன், ஜெயசீலன் அவர்களின் அன்புத் தாயாருமாவார்,
மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
உற்றார் ,உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் ;
ஜெயசீலன்:
Varthan-00447422788140
Seelan-0447962160462
திரு கதிரமலை அவர்களின் இறுதிக் கிரியைகள் covid -19 காரணமாக கனேடிய சட்டத்திற்கமைய குறிக்கப்பட்ட எண்ணிக்கையானவர்கள்
மட்டுமே பங்கு பற்ற முடியுமென்பதால் இந் நிகழ்வானது குடும்ப உறுப்பினர்கள் மாத்திரம் பங்கு பற்றும் நிகழ்வாக நடைபெற உள்ளது. எனவே உறவினர்கள் ,நண்பர்கள் இந் நிகழ்வை நேரலை மூலம் பார்வையிட முடியும், அதனை பார்வையிட பின்வரும் இணைப்பை அழுத்தி பார்வையிடவும், இணைப்பில் உங்களது பெயர் மின்னஞ்சல் முகவரி குறிப்பிட வேண்டும், அப்போதுதான் பார்வையிட முடியும், நிகழ்வுகள் நாளை திங்கட்கிழமை 28-12-2020 காலை 8-30 முதல் 10-30 வரை இடம்பெறும்
செம்பிகலட்டி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரமலை தம்பிமுத்து அவர்கள்
26.12.2020 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னார் காலம் சென்றவர்களான தம்பிமுத்து இலக்குமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான கைலாயப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், பார்வதிப்பிள்ளையின் அன்பு கணவரும், முகுந்தன் (கனடா), காகுந்தன்(கனடா), தீபா(கனடா), சோபா(கனடா), ஆகியோரின் அன்புத்தந்தையும், சுகந்தினி, யமுனா, சுரேஷ்குமார், பாலகாந்தன், ஆகியோரின் அன்பு மாமாவும்,
நாகேஸ்வரி, தேவராசா, அமரர் நடராசா, மகேந்திராதேவி, சரஸ்வதி, அம்பிகாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரரும்,
சிவநாயகம், ராசம்மா, கந்தசாமி, தெய்வநாயகி, ஆறுமுகசாமி, முருகானந்தவேல், செல்வநாதன், சரஸ்வதி, சிவமலர் ஆகியோரின் மைத்துனரும்,
கோபாலகிருஷ்ணர் சிவகாந்தன்,, இளையதம்பி, கமலேஸ்வரி, விஐயலட்சுமி, ராசாத்தி, மல்லிகாதேவி, மகாலட்சுமி, குருமூர்த்தி ஆகியோரின் சகலனும்,
நாவலன், நிலவன், நிரூபினி, கவீன், ராணியன், ரம்மியன், மாதங்கி, கிருசாந், கவிசன், சாம்பவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு_
முகுந்தன் +1 4167715930.
காகுந்தன் +1 4165608490.
தீபா, பார்வதி +1 4164906281.
சுரேஸ்குமார் +1 4162949764.
சோபா +1 4166092193
காந்தன் +1 4168072193.
யா/ இடைக்காடு மகா வித்தியாலயத்தில் ஆரம்பப் பிரிவுத் தலைவதராக நீண்ட காலம் பணியாற்றி இன்று அரச பணியில் இருந்து ஓய்வு பெறும் ஆசிரியை தெய்வமணி தம்பு அவர்களை வாழ்த்துவதில் பெரு மகிழ்வடைகின்றேன். ஓய்வு பெறும் காலத்தில் தரம் 5 பரீட்சையில் உயர் சித்தி வீதத்தையும் வெட்டுப் புள்ளிற்கு மேல் உயர் எண்ணிக்கையையும் பெற்றமை இறைவனே அவரது அர்ப்பணிப்பான 9ஏவையை ஆசிர் வதிப்பது போல் உள்ளது.
21.12.2020 திங்கட்கிழமை தனது மணி விழாவை மயமிக எளிமையாகக் கொண்டாடும் ஆசிரியைகரகு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.... உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகிறேன்.....
செல்வி நிதர்சனா குணபாலசிங்கம் அவர்களினால் எமது இடைக்காடு மகாவித்தியாலய அன்னை பெருமையடைகிறாள்.
எமது வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 13 வரை கற்று உயர்தரப் பரீட்சைநில் 3A உடன் மாவட்ட நிலை முதலாம் இடத்தையும் பெற்று கொழும்பு பல்கலையின் சட்டத்துறை மாணவியாகச் சேர்ந்து கல்வி கற்றார். இறுதிப் பரீடசையில் சட்டமானி இரண்டாம் வகுப்பு மேற்பிரிவு பட்டத்தைப் பெற்றுள்ளார்.
அவர் Bachelor of Law LLB சட்டமானி என்ற பட்டத்தைப் பெற்று வித்தியாலயத்தின் முதலாவது சட்டமானி என்ற பெருமையைபர பெற்றுள்ளார்.
நாம் அனைவரும் அவரை உளமார வாழ்த்துகின்றோம்.
வாழ்த்துக்கள் மேன் மேலும் நல்ல நிலை அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்
இறையருளில் மாப்பாணி கந்தசாமி.
எமது வாழ்நாளில் பல தரப்பட்ட மனிதர்களுடன் பயணித்திருப்போம் . எமது உள்ளூரில்
பல மனிதர்களின் நோக்கம் அல்லது செயற்பாடுகள் சமூக முன்னேற்றம் சார்ந்ததாகவே இருந்ததை பலரின் செயற்படுகளின் மூலம் கண்டுள்ளோம்.இந்த வகையில் நான் அவதானித்த கற்றுணர்ந்த மாப்பாணியாரைப் பற்றி இங்கு எழுத விளைகின்றேன் .
புலம் பெயர்ந்த இங்கே கை தூக்கி விடுபவர்களை விட தள்ளிக் கீழே விழ வைப்பவர்களே அதிகம்.இதில் இருந்து சற்று மாறுபட்டவராக எமது உள்ளூர்காரர் மாப்பாணியார் இருந்துள்ளார்.எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்து சமூக சேவைகளினூடாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்போதைய எமது உள்ளூர் வீதிகள் கிரவல் ஒழுங்கையாக,ஒற்றையடி மண் பாதையாக கை ஒழுங்கையாக பற்றையும் பூடுகளுமாய் இருக்கும்.மாரி காலத்தில் ஓய்வாக இருக்கும் நேரத்தில் கிராம வாலிபர்களின் முயற்சியால் உள்ளூர்காரர் அனைவரும் இணைந்து சிரமதான முறையில் ஈடுபடுவோம். அப்போதெல்லாம் மாப்பாணியார் துப்பரவில் ஈடுபடும் எமக்கு உணவு தேநீர்,வடை,அவல் என்று சிற்றுண்டிகளை அளித்து ஊக்கமளிப்பார் .
இவை மட்டுமல்ல பல வாலிபர்களுக்கு சுய வேலை வாய்ப்புகளுக்கு தன்னாலான பல உதவிகளை செய்து கொடுத்துள்ளார். அன்றைய கால கட்டத்தில் எமது விவசாய விளை பொருட்களை இடைத் தரகர்கள் இன்றி நேரடியாக மொத்த வியாபாரிகளுக்கு தகுந்த விலைக்கு பொருட்களை விற்று தந்தார் மேலும் விளை பொருட்களை தகுந்த பெறுமதிக்கு வேண்டி அவைகளை நியாய விலைக்கு விற்பனை செய்து புதிய முயற்சிகளை உருவாக்கினார். மேலும் தனது விளை நிலங்களில் கரணைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சாமி, குரக்கன், சணல், ,தக்காளி, வாழை போன்ற பயிர்களை செய்து இப்படியும் லாபம் பெறமுடியும் என்பதனை நிரூபித்தவர் மாப்பணியார் ஆவர் .
சூழ் நிலைக்குஏற்ப மாட்டுப்பண்ணைகளை உருவாக்கி பால், நெய், எரு போன்ற புதிய முயற்சிகளைத் தொடர்ந்தார்.
உள்ளூரில் நடைபெறும் மானம்பூ திருவிழாவில் புவனேஸ்வரி அம்பாள் கிராம வலம் வரும் போது மாப்பாணியாரின் வீட்டுக்கு முன்னால் பெரு விழாவே கோலம் காணும். அனைவருக்கும் மன நிறைவுடன் பல வகையான சிற்றுண்டிகளை மன மகிழ்ந்து இறை அன்புடன் உபசரிக்கும் பாங்கினை நான் பார்த்திருக்கிறேன் .
பின்னாளில் அம்பாளின் அதி பக்தியினால் அவ் ஆலயத்தில் வெகு நீண்ட காலமாக பொருளாளராக இருந்து ஆலய வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார்.
அக் காலா கட்டத்தில் தன் சுய முயற்சியால் மாலை கட்டும் நுணுக்கங்களைக் கற்று அதிலும் தேர்ச்சியாளர் ஆனார். இவரின் இறையருளை நானும் மெய் மறந்து பார்த்திருக்கின்றேன். இவரின் மகத்தான சேவைகளை எமது கிராமம் பெற்ற காலத்தில் நானும் அவர் காலத்தில் …
நிகழ்வுகளின் நினைவுகள்--3 -- இடைக்காடு சனசமூக நிலையம் –1976
வெள்ளிவிழா மண்டப திறப்பு விழாவும் ---தரிசிக்கும் மருந்தகமும்.
எமதூரில் மருத்துவமனை இல்லாமை ஓர் நீண்ட குறைபாடாக விளங்கி வந்துள்ளது, மருத்துவ தேவைகளுக்கு மக்கள் பக்கத்தில் உள்ள அச்சுவேலி கிராமிய வைத்தியசாலைக்கோ அல்லது வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கோ தான் போக வேண்டியிருந்தது. அதற்கும் நாம் பேருந்தில் செல்வதானால் அச்சுவேலி தொண்டமானாறு பிரதான வீதிக்கு நடந்து சென்றுதான் போகவேண்டியிருந்தது. அதனால் வயது முதிர்ந்தோர் பெரிதும் சிமப்பட்டார்கள் எமதூரில் அடிக்கடி விசக்கடி பாதிப்பு ஏற்படுவதுண்டு. இக்குறைபாட்டை முழுமையாக தீர்க்க முடியாவிடினும் ஓரளவிற்காவது சரி செய்ய வேண்டும் என்ற நோக்கில் 1974 ல் நான் இடைக்காடு சன சமூக நிலைய செயலாளராக செயல்பட்டபோது சன சமூக செயற்குழு தீர்மானித்தது, அச் சமயத்தில் பத்தைமேனி- இடைக்காடு கிராம சேவக பிரிவிற்கான பொதுச் சுகாதாரப் பரிசோதகராக PUBLIC HEALTH INSPECTOR கதிரிப்பாயைச் சேர்ந்த பிறைசூடி அவர்கள் ( அவரின் இயற்பெயர் கந்தையா என நினைக்கிறேன்). நியமிக்கப் பட்டார். அச்சுவேலி பகுதிக்கு அச்சுவேலியை சேர்ந்த பிரத்தியோக வகுப்புக்களை நடாத்தும் சத்தியமூர்த்தி ஆசிரியரின் சகோதரர் அவரின் பெயர் வேதமூர்த்தி என நினைக்கிறேன் .எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. பொது சுகாதார பரிசோதகர் வேதமூர்த்தி அவர்கள் அச்சுவேலிப் பகுதிக்கு கடமையாற்றினாலும் இடைக்காட்டிற்கும் பெரிதும் உதவிசெய்திருக்கிறார் , திரு பிறைசூடி அவர்கள் மிகவும் எளிமையானவராகவும் பழகுவதற்கு இனிமையானவராகவும், உயர்ந்த கம்பீரமான தோற்றமும் கடமையுணர்வும் கொண்டவராக இருந்தார். அதுமட்டுமன்றி பக்கத்தூரான கதிரிப்பாயை அவரது வாழ்விடமாகவும், அக்கிராமத்திற்கே சேவையாற்றும் வாய்ப்பும் கிடைத்தமை எமக்கும் சாதகமாக அமைந்தது. கடமை நிமித்தம் அவர் அடிக்கடி இடைக்காட்டிற்கு வருகை தருவதுடன் சன சமூக நிலையத்திற்கும் வந்து எம்முடன் உரையாடுவது வழக்கம். காலையில் அச்சுவேலிக்குச் சென்று மரக்கறி வாங்கினாலும் வாழைப்பழம் வாங்க இடைக்காட்டிற்குத் தான் வருவார்.
அவருடன் நாம் இது பற்றி கலந்துரையாடினோம். எனது சகோதரர் மருத்துவர் கந்தசாமி அவர்கள் இந்த விடயத்தில் தனது அனுபவங்களை எமக்கு ஆலோசனைகளாக வழங்கினார், அவர் கண்டாவளை அரசினர் மருந்தகத்தில் கடமையாற்றியபோது வாரத்தில் இரு நாட்கள் முரசுமோட்டைக்கும் ,கல்வெட்டித் திடலுக்கும் மதியத்திற்குப் பின் சென்று சிகிச்சை அளிப்பது வழக்கம் ,அதனை தரிசிக்கும் மருந்தகம் VISITING DISPENSARY என்பர். நான் அதனை பிறைசூடி அவர்களுடன் கலந்துரையாடும் போது நினைவூட்டினேன், அவர் யாழ் மாவட்ட சுகாதார பணிப்பாளருக்கு D.H.S ஓர் விண்ணப்பம் ஒன்றை எழுதிக் கொண்டு வருமாறும் ஓர் நாள் அவரை போய் சந்தித்து பேசுவோம் என்றார். நானும் அதற்கிணங்க …
திருமதி வேலுப்பிள்ளை பொன்னம்மா
தோற்றம் : 10/03/1927
மறைவு : 13/12/2020
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்
கொண்ட திருமதி வேலுப்பிள்ளை பொன்னம்மா அவர்கள் 13/12/2020 (ஞாயிற்றுக் கிழமை) அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான ஆறுமுகம் – செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலம் சென்றவர்களான கணபதிப்பிள்ளை – தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும் அமரர் வேலுப்பிள்ளையின் அன்பு மனைவியும் சின்னம்மா(இலங்கை) , பாக்கியவதி (மணி,கனடா ) ஆகியோரின் அன்புச் சகோதரியும் செல்வ ராஜேஸ்வரி (அவுஸ்திரேலியா), அபித ஈஸ்வரி (இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும் அமரர் சத்தியமூர்த்தி, சபாரத்தினம் ஆகியோரின் அன்பு மாமியாரும் சக்திவேல் , சத்தியநாராயணன், பிரபாகரன், சத்தியா , பானுஜா, கௌசிகா, ஹம்சா ஆகியோரின் பேத்தியாரும் ஐங்கரன், கபிலன் , ஓவியா, கதிரன், அகரன் , நதி, சங்கரி, சரண்யா, சிறிராம், சிவராம், சாய்ராம், சஜிராம், அசானா, அனிஷ், அகரன், முகிலன் ஆகியோரின் அன்புப் பூட்டியாரும் தனலட்சுமி (வசந்தி), சுகந்தினி , அமரர் சிறிதரன், நிர்மலா, முரளிதரன், கங்காதரன், வித்தியாதரன் (சங்கர்), செந்தில்வேல், செந்தில்ரூபி , செந்தில்வாணன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
தொடர்புகட்கு :
சக்திவேல் (அவுஸ்): + 642-8807-5976
சத்தியநாராயணன்(கனடா ) + 1 416 577 5000
கங்காதரன் (இலங்கை) - 94-77-603-0063
திரு.கந்தையா கணபதிப்பிள்ளை (ஓய்வுபெற்ற பிரதம தபால் அதிபர்) பிறப்பு : Dec .15.1924 உதிர்வு: Nov .26 2020
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும்
வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற பிரதம தபால் அதிபர் திரு.கந்தையா கணபதிப்பிள்ளை இன்று (Nov .26-2020) வியாழக்கிழமை ஹற்றனில் (Sri Lanka ) சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான கந்தையா – சிலம்பாத்தை தம்பதிகளின் அன்பு மகனும் காலம் சென்ற மயில்வாகனம் – லட் சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் நாகம்மாவின் அன்புக் கணவரும் ரோகினிதேவி (America) , சியாமளா (Hatton ) , சோமாஸ்கந்தா(Canada ), நாகேஸ்வரி (Canada ), அருள்மொழி (Canada ) அருள்மோகன் (Canada ) ஆகியோரின் அன்புத் தந்தையும்
முத்துவேல்,சிவகுமார்,சுரேஷ்,கிருஸ்னானந்தவேல்,விஜயகலா, கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மாமனும் சுஜா-அமலன், கஜந்தன், தினேசன், துவாரகா, நிருஜன், சிஜானி , பிரசானி, ஜீவிதன் , சதுர்சன் மிதுர்சா , யதுர்சா ஆகியோரின் அன்புப் பேரனும் அஸ்மி, விகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் காலம் சென்றவர்களான சின்னம்மா,செல்லம்மா,பொன்னம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் காலம் சென்றவர்களான ராமசாமி பண்டிதர், வேலுப்பிள்ளை, வேலுப்பிள்ளை, சரவணமுத்து, சிவசுப்பிரமணியம், சிவகாமி அம்மை, கதிரவேலு, அன்னபாக்கியம் ஆகியோரின் மைத்துனரும் சபாரத்தினம் (அமரர்), ராஜகுலசிங்கம்(அமரர்), மற்றும் வள்ளியம்மை,பரமேஸ்வரி ஆகியோரின் சகலனுமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் Hatton இல் நாளை வெள்ளிக்கிழமை (Nov 27-2020) நடைபெறும் . இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
பிள்ளைகள்
ரோகினி ( மகள் – USA ) 920- 4263168
சியாமளா (மகள் -Srilanka ) 051-2223390
சோமாஸ் (மகன்- Canada) 416-2994946
நாகேஸ்வரி (மகள் -Canada ) 905-2015769
அருள்மொழி (மகள் -Canada ) 416-2899163
அருள்மோகன் (மகன் -Canada ) 416-2890727
Moreயாழ்.இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணம் சங்கரப்பிள்ளை அவர்கள் 08-11-2020 ஞாயிற்றுக்கிழமை
அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேலுப்பிள்ளை சங்கரப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
விஜயஸ்ரீ, ஸ்ரீவிக்னேஷ் (ஈசா), லங்கராசா (கணேஷ்) , ஞானஸ்ரீ (ரதி) ஆகியோரின் பாசமிகு தாயும் ,
சரவணபவானந்தன் , மகேந்திரராசா , கேதீஸ்வரி (வானதி) , இந்திரகாந்தன் ஆகியோரின் மாமியாரும்
பிரவீணா, கேசிகன், சோபனன், ஹரீஸ், ஹரீனா, தருண் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு…
ஞானஸ்ரீ - மகள்
+14162390163
விஜயஸ்ரீ - மகள்
+94772968845
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கல்வியங்காட்டை வதிவிடமாகவும்கொண்ட பேராசிரியர் கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி
அவர்களின் அன்பு மனைவி சின்னத்தம்பி நாகம்மா அவர்கள் தனது 81வது வயதில் இறைபதம் அடைந்தார்.
இவர் சிகா சிவகுமார், கருணா சின்னத்தம்பி, தேவா ராஜ்குமார், கங்கா சின்னத்தம்பி ஆகியோரின் பாசமிகு தாயாரும் நல்லையா சிவகுமார், கிருபாசக்தி கருணா, நவரட்ணராஜா ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், தேனுகா,திவ்யன், ஓவியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் விதுஷா, பவுனுஷா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் , காலஞ்சென்றவர்களான இராசம்மா,தெய்வானை(சின்னக்கா),கதிராசி (பொன்னம்மா) சின்னப்பு தம்பிராசா, சின்னப்பு நல்லையா ஆகியோரின் இளைய சகோதரியும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம்,பெரியதம்பி ஆகியோரின் மைத்துனியும், கதிராசி தம்பிராசா,இராசேஸ்வரி நல்லையா ஆகியோரின் மச்சாளும் ஆவார்.
இறுதிக் கிரியைகள் இன்று கல்வியங்காட்டில் நடை பெறும்
திருமதி கமலாம்பிகை சற்குணம் (வயது 76)
பிறப்பு: 14 MAY 1944 இறப்பு: 05 NOV 2020
யாழ்.இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும்,ஆவரங்காலை
வசிப்பிடமாக கொண்டிருந்தவரும், தற்போது கனடாவை வதிவிடமாக கொண்டவருமான கமலாம்பிகை சற்குணம் அவர்கள் 05-11-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சற்குணம் அவர்களின் அன்பு மனைவியும்,குகரூபன்(பிரித்தானியா), ரூபவல்லி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற தேவநாயகம், திலகவதி, பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நாகேஸ்வரமூர்த்தி, பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,ராமகிருஸ்ணன், கமலாதேவி, கமலாதேவி, விஜயலக்ஸ்மி ஆகியோரின் அன்பு மைத்துனியும், இராஜாம்பிகை, சர்வானந்தா, தயானந்தா, வசந்தாதேவி, காலஞ்சென்ற கபிலன், சுகிர்தா, தர்மசீலன், ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமியும்,அனுசுயா, அனுரதன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,அபிசா, அமிசா, அகிசா, சசிசன், தீபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 08 Nov 2020 3:00 PM - 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 08 Nov 2020 5:00 PM - 6:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 08 Nov 2020 7:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரூபன் Mobile : +447900004977
ரூபி Mobile : +14163356371
திலகம் Mobile : +17184548993
பொன்னம்பலம் Mobile : +94766248326
சர்வா Mobile : +14168787552
மனோ Mobile : +14164732261
யா/ இடைக்காடு ம.வி
பல்கலைக்கழகத் தெரிவு 2019
1.ஶ்ரீ வடிவேலு தயாபன் பொறியியல் மொறட்டுவ
2.முருகையா பிருந்தாபன் கணணி விஞ்ஞானம் கொழும்பு
3. ரகுநாதன் சரண்யன் தகவல் தொழில்நுட்பம் களனி
4. நிவேதிகா சிவஞானசீலன் சித்த மருத்துவம் யாழ்ப்பாணம்
மேற்படி மாணவர்களின் சாதனையைப் பாராட்டுவதோடு எமது உளம் கனிந்த வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றோம்.. மேலும் பல வெற்றிப் படிகள் தாண்ட வாழ்த்துகிறோம்.
More