By திலகம் இராமகிருஸ்ணன், on April 18, 2021
 
                    கலியுகம் பிலவ ஆண்டு சித்திரை(சித்திரம்வரையும்-....திரை)மாதம் 1ம் திகதி
(13/4/21)செவ்வாய்க்கிழமை) பிரபஞ்சம் எனப்படுகிற திரையிலே சித்திரம் வரைவதுபோல
தந்தை சூரியன் தலைமையில் கிரகங்கள் சுற்றி வருகி்றன,நமது முன்னோர்கள் அவற்றின்
தன்மை அறிந்து பெயர்சூட்டி ஒரு கிழமையில் ஏழு நாட்கள் ஞாயிறு திங்கள் செவ்வாய்
புதன் வியாழன் வெள்ளி சனி என ஏழுகிரகங்கள் பெரியவை என்றும் அவை நகரும்
விதத்தில் இரண்டு வெட்டுப்புள்ளிகள் ஏற்படுகின்றது எனவும் வடபக்கம் வெட்டுகின்ற
புள்ளிக்கு ராகு எனவும் தென்பக்கம் வெட் டுகின்ற புள்ளிக்கு கேது எனவும் பெயர் சூட்டி
நவக்கிரகங்களாக்கி கணித்து வாழ்ந்து வந்துள்ளார்கள்,வாழ்ந்து வருகிறார்கள், உடம்பிலேயே
ஒன்பது துளைகள் முக்கு காதுகள் கண்கள் வாய் முன்துளை ராகு எனவும் பின் துளை
கேது, எனவும் கணித்துவாழ்ந்துள்ளார்கள், சீனர்கள் கிந்திக்காரர்கள் மலையாளம் தெலுங்கு
பேசுபவர்கள் தைமாத வளர்பிறை மாசிமாத வளர்பிறை பங்குனிமாத வளர்பிறை என
சந்திரனை முன்னிலைப்படுத்தி சந்திர புத்தாண்டு என கொண்டாடி வருகிறார்கள், ஆனால்
தமிழ்மக்கள் உலக தந்தை சூரியனை முதன்மையாகக் கொண்டு சித்திரைமாதம்
சித்திரைப்புத்தாண்டென்று கொண்டாடி வருகிறோம்,தையளாள் பூமித்தாயின் புத்தாண்டு
தந்தைசூரியனுக்கு நன்றி தெரிவிப்பது,இது தமிழ்மக்களின் சிறப்பு,தைப் புத்தாண்டுப்
பொங்கல், பிரபஞ்சம் எனப்படுகிற ஒரு சக்தி \நிலம்/ நீர் காற்று/ ( நெருப்பு( சூடு)/
ஆகாயம் என அறிந்து இவற்றிற்கு வணக்கத்தலங்களையும் அமைத்து வணங்கி வாழ்ந்து
வந்துள்ளார்கள்தமிழ்மக்கள்,பிரபஞ்சத்தின் எல்லாக்கணிப்புகளும் தமிழ்மக்களிடமே
உண்டு,எனவே இயற்கையான சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடிசக்தியை வணங்கி
வளமாக வாழ்வோம்,எப்படியாயினும் தமிழ்மக்கள் தமிழர்களின் நிகழ்வுகளை தமிழ்ப்
பண்பாட்டுடன் செய்து வாழ்ந்து வந்தால் சிறப்பாக இருக்கும்,வாழ்கதமிழ் வளர்க
தமிழர்பண்பாடு,
திலகம் இராமகிருஸ்ணன்,