எனது பதவிகளை நானே உயர்த்தலாமா ?

By N. மகேசன் on March 4, 2021

Card image cap

எனது பதவிகளை நானே உயர்த்தலாமா ?

எந்த ஒரு பதவி உயர்வையும் நாங்கள் பெறுவதற்கு பரீட்சை எழுதியே ஆகவேண்டும். எல்லோருக்கும் தெரியும். ஆனால் நாங்கள் எப்படி எங்களுக்கு பதவியை நாங்களே உயர்த்துவது !? அதற்கு ஒரே வழி தான் உண்டு. அது என்ன வழி ? பொதுப்பணிகள் , சமூகப்பணிகளையும் பொறுப்பு ஏற்பவர்கள் தங்களுக்குத் தாங்களே பதவிகளை கொடுத்துக் கொள்வது தான்.

பொறுப்பான பண்பு என்பதுபொறுப்பு ஏற்பது வாகும் . பொறுப்பு ஏற்பது என்பது முழுவதும் நமது மனங்களிலே தங்கியுள்ளது. பொறுப்பானவர்கள் எது சரியாக நடைபெறுகிறதோ அதை உடனடியாக பொறுப்பு ஏற்பார்கள். ஆனால் சிலர் தவறாகப் போகும்போது பொறுப்பு எடுத்து அதை திறம்பட நடத்தி முடிப்பார். ஆனால் கீழ்படிதல் இல்லாமல் திறம்பட செய்து முடிக்க இயலாது. பொறுப்பு ஏற்க முடியாத நபர்கள் தங்களுடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள், இனம், கடவுள், விதி, அதிர்ஷ்டம், அல்லது சந்தர்ப்பம் போன்றவற்றின் மேல் பழி கூறுவார்கள்.

பொறுப்புத் தன்மை என்பது சிந்தித்துச் செயல்படும் உயர்ந்த குணத்தை உள்ளடங்கி இருக்கும் . சிறு புத்திதானம் நமது பொறுப்புகளை புறந்தள்ளி வைத்து விடுகின்றது . இதைப் பற்றி சற்று சிந்தியுங்கள்

நமது சமூகத்தில் மூன்று வகையான மனித இயல்புகள் இருப்பதாக நான் எண்ணுகின்றேன்.

முதலாவதாக;

காரியத்தை நடத்தி வைப்பவர்கள்.

இரண்டாவதாக;

காரியத்தை நிகழ்த்துவதை பார்ப்பவர்கள்.

மூன்றாவதாக;

காரியம் நடப்பதை பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.

நீங்கள் எந்த வகையான நபர்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

பொறுப்புகள் சுமக்க முடிந்தவர்கள் இடமே பொறுப்பு சென்றடையும்.

தமிழ் மகா நூல் ஒன்று கூறுகின்றது.

முதல் பொறுப்பு சமுதாயத்துக்கு.

இரண்டாவது பொறுப்பு எனது குடும்பத்திற்கு.

மூன்றாவது பொறுப்பு எனக்கு உரியது.

கடந்த கால தவறுகள் நடந்தவையாக செல்லட்டும்;

இன்றைய செயல்கள் நல்லவையாக இருக்கட்டும்;

நாளைய திட்டங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையட்டும்;

நன்றி மகேசன்