கன்னியா(கன்னியர் ஊர் ) வெந்நீர் ஊற்று. (சுடு நீர்)

By நா . மகேஸ்வரன் கனடா on Feb. 10, 2021

Card image cap

கன்னியா(கன்னியர் ஊர் ) வெந்நீர் ஊற்று. (சுடு நீர்)

சுடுநீர் கிணறு கன்னியா ஈழவள நாட்டில் கிழக்கு மாகாணத்திலே திருகோணமலை என்கின்ற நகர
பட்டினத்தில் அமைந்துள்ளது. இதனை இன்னும் சிறப்பாக கூறுவதாக இருந்தால், கிழக்கு மாகாணம்
திருகோணமலையில் இருந்து வவுனியா செல்லும் பாதையில் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள
கன்னியா என்கின்ற கிராமத்தில் வரலாற்று புகழ் மிக்க சுடு நீர் கிணறுகள் அமைந்துள்ளன.
இக் கிணறுகள் தொடர்பான கர்ண பரம்பரை கதை ஒன்று இராவணேஸ்வரன் ஆகிய
இராவணனுடன் சம்பந்தப்பட்டதாக உள்ளது.அது என்னவெனில் இராவணேஸ்வரன் தனது
தாயாரின் ஈமக்கிரியை செய்வதற்கு ஏழு இடங்களில் தனது உடைவாளால் வெட்டி நீர் ஊற்றினை
வரவழைத்தான் என்று அறியப்படுகின்றது. அதுவே கன்னியாவில் உள்ள சுடு நீர் கிணறுகள் ஆகும்.
இக் கிணறுகள் வெவ்வேறு அளவிலான வெப்பநிலை கொண்டவை.
உலகிலேயே மிக அபூர்வமாக தோன்றுகின்ற சுடு நீர் கிணறுகள். இதுபோன்ற கிணறுகள் இந்தியா,
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து,சுவீடன் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன.
அன்றைய மகேஸ்வர சித்தர் இந் நீர் பற்றிய வெப்ப நிலைகளை குறித்து வைத்துள்ளார். அதன்படி,
முதலாவது கிணற்றில் 101 பாகையும்
இரண்டாவது கிணற்றில் 101.5 பாகையும்
மூன்றாவது கிணற்றில் 107 பாகையும்
நான்காவது கிணற்றில் 88.5 பாகையும்
ஐந்தாவது கிணற்றில் 86 பாகையும்
ஆறாவது கிணற்றில் 105 பாகையும்
ஏழாவது கிணற்றில் 90 பகையுமாக குறிப்பு எழுதி வைத்துள்ளார்.
இதனை 1817 -களில் டேவிட் என்ற ஆங்கில அறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார்.இவைகளை உற்று
நோக்கும் போது அன்றைய ராவணேஸ்வரன் ஆட்சி பெரு வியப்பாக உள்ளது .
இராவணேஸ்வரன் என்ற மன்னனிற்கும் இடைக்காடு என்ற கிராமத்திற்கும் உடைய
தொடர்புகளையும் சற்று ஆழமாக இங்கே பார்க்க விழைகின்றேன்.இடைக் காட்டிலே வடபுறத்தில்
கோணாவளை மற்றும் இராக்கை என்ற இரு இடங்களை உற்று நோக்குவோமாக இருந்தால் ,
அதாவது இராவணேஸ்வரன் வந்து சென்ற இடத்துக்கு அமைக்கப்பட்ட வளைவின் பெயரே
கோணாவளை . இராவணன் இருந்த இடமே பின்னாளில் இராக்கை என பெயர் மருவி உள்ளதாக
எண்ணுகின்றேன். மேலும் இந்த இராவணன், பத்துத்தலை இராவணன் என்று தவறாக ஒரு புரிதலை
ஆரியக் கூட்டம் உண்மைக்கு புறம்பாக உருவகம் செய்துள்ளார்கள். இவ் மகாமேதை பத்தினையான
அறிவுடையவராக இருந்தார்.அவையாவன இசைஞானி விமானியாக, அரசியலில் அறியனாக
,மருத்துவ நிபுணராக குற்றவியல், கட்டிடக்கலை நிபுணராக, வானியல் தத்துவாத்தியாக இப்படி பத்து
விதமான அறிவார்ந்த நிலையில் இருந்ததினால் பத்தினை உடைய இராவணன் இந்நாளிலே
பத்துத்தலை இராவணன் என்று தவறாக எம் மத்தியிலே ஆரியக் கூட்டம் எழுதிச் சென்று விட்டனர்.
இந்த உலகத்தில் ஒரு இனமாக தமிழர்கள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள் என்பது கண்கூடாக ஆய்வின்
ஊடாக பெற்றுக் கொண்ட அறிவாகும். இதனை இன்றைய எதிர்கால தலைமுறையினர் மிகவும்

விரிவாகவும் ஆழமாகவும் சிந்தனையோடும் ஆராய்ச்சி செய்து உலகத்துக்கு காட்ட வேண்டிய கடமை ,
நமது இளைய தலைமுறைக்கு உண்டு என்பதனை இதன் மூலம் வைக்க விரும்புகின்றேன் .
நன்றி
அடுத்த பதிவில் மகேஷ்.

Kanniya Hot Water Wells (Water Spring)

There are 7 historically famous hot water wells in the village of Kanniya. There hot springs are
located 8 kilometers away from Trincomalee, in the Eastern province along the road leading to
Vavuniya.
A legend related to these wells connects the legendary King Ravana with them. It is said that
Ravana, in order to perform the last rites to his mother, created seven hot springs. It is believed
that the Kanniya wells are the same ones linked to Ravana. A strange aspect of these wells is that
each one has a different level of temperature. These types of hot springs are very rarely found
across the world. It is believed that bathing in these wells could cure many diseases.
Davy, a historian, had inspected and documented the different levels of temperature of these
wells, and reported as such: 1 st one was 101°F, 2 nd one was 101.5°F, 3 rd one was 107°F, 4 th one
was 88.5°F, 5 th one was 86°F, 6 th one was 105°F, and 7 th one was 90°F.
Hindus and Buddhists alike visit these areas and take baths in these wells. Many foreign tourists
also undertake trips to this area. Followers of Islam too consider Kanniya as a holy place. There
is a tomb of Muslim saint on the Kanniya mount which is known as the 40 feet tomb by the Muslims.