இடைக்காடு மகாவித்தியாலத்தைச் சேர்ந்த அன்பர்களே,

By பொன் கந்தவேல் on Feb. 10, 2021

இடைக்காடு மகாவித்தியாலத்தைச் சேர்ந்த அன்பர்களே,
கனடா நாட்டின் ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்
கு நீங்கள் $12,650  நன்கொடை திரட்டி வழங்கியது வரலாறு. கல்லூரிகள் வழங்கிய
நன்கொடைகளில் உங்கள் நன்கொடைதான் தொகையில் அதிகமானது. இதையிட்டு
நீங்கள் பெருமை கொள்ளலாம்.  
193 வருடம் வயதான ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ்
இருக்கை, தமிழ் மக்களுக்குச் சொந்தமானது. இதற்குத் தேவை நிதி 3 மில்லியன்
டொலர்கள்; ஏற்கனவே 2.4 மில்லியன் டொலர்கள் திரட்டியாகிவிட்டது. மேலும் தேவை
600,000 டொலர்கள் மட்டுமே. இப்பொழுது இறுதிக் கட்ட நிதி திரட்டல்
நடைபெறுகிறது. Last lap என்பார்கள். கடைசிப் பாய்ச்சல்.
இந்த முயற்சி வெற்றிகரமாக அமைய மீண்டும் உங்களிடம் நன்கொடைக்கு வருகிறோம்.
ஏற்கனவே கொடுத்தாகிவிட்டது என்று நினைப்பீர்கள். காலை உணவு சாப்பிட்டால்
மதியம் சாப்பிடுவதில்லையா? மதியம் சாப்பிட்டால் இரவு உணவு எடுப்பதில்லையா?
இன்னும் தேவை மிகச் சிறிய தொகைதான். பல்வேறு தமிழ் சங்கங்கள், ஊர் அமைப்புகள்,
கல்லூரிகளின் பழைய மாணவ மாணவிகள் ஒன்றுதிரண்டு உதவினால்
சிலவாரங்களிலேயே எங்கள் கனவு நனவாகிவிடும்.
இடைக்காடு மகாவித்தியாலயத்தின் பெயரும் நன்கொடையும் ரொறொன்ரோ
பல்கலைக்கழக ஏடுகளில் என்றென்றும் நிரந்தரமாகப் பாதுகாக்கப்படும். இது எங்கள்
வருங்காலச் சந்ததியினருக்கு நாங்கள் ஆற்றும் கடமை. எங்கள் மொழியை நாங்கள்
காப்பாற்றாவிட்டால் வேறு யார் செய்வார்கள்? நல்லது செய்யத் தயக்கம் வேண்டாம்.
இன்றே செய்யுங்கள். நன்றே செய்யுங்கள்.
ரொறொன்ரோ பல்கலைக்கழகம் தமிழ் இருக்கைக்கான நிதிப் பங்களிப்பு

மேற்படிவிடயம் தொடர்பாக பல தடவைகள் எனது கருத்தை எழுதி யிருந்தேன். அதன் பலனாக எம் உறவுகளும் பழைய மாணவர்களும் கணிசமான நிதியினை உதவியிருந்தீகள். அதன்படி கடந்த வருடம் ரொறன்ரொ உறவுகளால் 7200.00 டொலர்களும் மொன்றியல் உறவுகளால். 5450.00 டொலர்களும் ஆக மொத்தம் 12650.00 டொலர்களை தமிழிருக்கை உதவுதொகையாக வழங்கியிருந்தோம். இவ்விடத்தில் மொனறியல் பிரதேசத்தில் உதவுதொகையைபெறுவதற்கு முன்நின்றுளைத்த திரு பரமசிவத்துக்கும் எம் மனமாந்த நன்றியைக் கூறக் கடமைப்பட்டுளோம்.

இடைக்காடு சிறிய ஊர்தான். எனினும் அவர்களின் பங்களிப்பு எல்லோரையும் விட உயர்வாக உள்ளது என தமிழிருக்கைகுழு எம்மைப் பாராட்டிருப்பது எமக்கல்ல எம் ஊருக்கே மிகவும் பெருமையாக உள்ளது.

இது தொடர்பாக அவர்களால் எமக்கு அனுப்பிவைக்கப்பட்ட செய்தியை கீழே இணைத்துள்ளோம்.

எம்மைப்பற்றிதெரிந்கொண்டு தமிழ் இருக்கைக் குழு மீண்டும் எம்மிடம் உதவிகேட்டு நிற்கிறது. ஒரு குடும்பத்தில் பல பிள்ளைகள் இருந்தாலும் பெற்றொர் கஸ்டப்படும்போது எல்லாப்பிளைகளும் உதவுவதில்லை. ஒரு சில பிள்ளைகளே மீண்டும் மீண்டும் பெற்றோர்க்கு உதவுவார்கள். அதுபோலத்தான் இதுவும்.

நாம் ஏற்கனவே கணிசமான தொகையை உதவிவுள்ளோம். உதவியோர்க்கு எமது மனமார்ந்த நன்றிகள். எனினும் ஏதோ சில வசதியீனம் காரணமாக சிலர் இந்நிதிப்பங்களிப்பில் பங்குகொள்ளாமல் இருந்திருக்கலாம். அவர்களைஇவ் இறுதிச் சந்தற்பத்தைப் பயன்படுகத்திக் கொள்ளுமாறு தயவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

பணம் சிறியது, அதனால் வரும் பயன் பெரியது.
பெறுவதை விட கொடுப்பதே மகிழ்ச்சியானது.

உங்கள் உதவுதொகையை e tansferமூலம் அனுப்புவதாயின் அதற்கான முகவரி,

S.Navakumar 416 525 6299
email: nanthantsap@yahoo.ca

P.Kanthavel 6477027346
email :. pSonkanthavel@yahoo.com

அன்புடன்,
பொன் கந்தவேல்
13.2.2021

.

.