Informed by தங்கரசி கணபதிப்பிள்ளை on Aug. 6, 2026
இடைக்காடு, அச்சுவேலியை பிறப்பிடமாகவும் முத்துஐயன்கட்டு, ஒட்டுசுட்டானை வதிவிடமாகவும் கொண்ட திரு செல்லத்துரை கணபதிப்பிள்ளை இன்று வியாழக்கிழமை(06.08.2026) இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரை - தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்ற கனகசபை - பாறுபதி தம்பதிகளின் அன்பு மருமகனும், கனகரத்தினத்தின் அன்புக் கணவரும், தங்கரசியின் (ஆசிரியர், ஒட்டு சுட்டான் மகாவித்தியாலயம்) பாசமிகு தந்தையும் தவரூபனின்(தொழில்நுட்ப உத்தியோகத்தர், வீதி அபிவிருத்தித் திணைக்களம், பருத்தித்துறை ) அன்பு மாமனாரும், தன்ஷியின் பாசமிகு பேரனும், கனகரத்தினம், அமரர் தங்கவேல், இராசேந்திரமலர் சோதிமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.