Card image cap

நீத்தார் நினைவு -- அமரர் கதிகாமு தனிகாசலம்

Informed by பொன். கந்தவேல் on June 4, 2023

Card image cap

யாழ் இடைக்காட்டை பிறப்பிடமாகவும் தனது பாலிய பருவத்தில் இடைகாடு மகாவிதியாலயத்தில் கல்விகற்று தனது வாலிபகாலத்தில் கிளினொச்சி இராமனாதபுரத்தில் சிறந்ததோர் விவசாயியாகவும் வாழ்ந்த அமரர் கதிகாமு தனிகாசலம் அவர்கள் புலம் பெயர்ந்து கனடிய மண்ணில் குடும்பத்துடன் வாழும்காலத்தில் தனது 83வது வயதில் 03.05. 2023 அன்று இறைபதம் அடந்தார்.

இடைக்காடு மகாவித்தியாலயத்தில் தன் கல்வியைக் கற்றுத்தேறிய அவர் தன் குடும்பத்தவராலும் சக மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் விரும்பப்டும் ஒரு மாணவராகவும் கல்வி விளையாட்டு பாட்டு நடனம் நாடகம் முதலான கலை நிழகழ்ச்சிகளிலும் சிறந்துவிளங்கும் ஓர் மாணவனாகவும் தன்னை அடையாளபடுத்திக் கொண்டார். அக்காலத்தில் உணவு உற்பத்தியைப் பெருக்கும் நோக்குடன் கிளினொச்சி இராமனாதபுரம் பகுதியில் தன் குடும்பத்டுக்கு வழங்கப்பட்ட குடியேற்றத்திட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அவர் தன் அபார உளைப்பின்மூலம அப்பகுதியில் முன்னேற்றகரமான ஓர் விவசாயியாகத்திகழ்ந்துவந்தார். அங்கு ஆசிரியராகக் கடமையாற்றிவந்த் கண்ணம்மா என்பவரை த வாழ்கைத்துணையாகத் தெரிவுசெய்து அதன் விளைச்சலாக இனிதாக ஓர்பெண் மகவைப்பெற்று தன் இல்லறத்தை இனிதே நடாத்திவந்தார்.

எம் நாட்டுப்பிர்ச்சகனை நாளுக்குநாள் மோசமடைந்து வரும்காலை 80 துகளின் பிற்பகுதியில் குடும்பத்தாருடன் கனடிய நாட்டுக்கு குடிபெயர்ந்து தனது வாழ்வினை நடாத்திவந்தார்.

கனடிய மண்ணில் இருக்கும்போதும் அவர் தனது செயற்பாடுகள் தனியே ஊதியத்துக்கன வேலையுடன் நின்றுவிடாது கதை கட்டுரை சஞ்சிகைகள் நாடகங்கள் முதலான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு தனது திறமைகளை மக்கள் மத்தியிலும் கொண்டுசென்றார். தன் வாழும் காலத்தில் ஊர் மக்கழுடனும் நண்பர்கலுடனும் தன்னாலான உதவிகள் அனைத்தும் செய்து யாவராலுனம் மதிக்கும் ஒரு மனிதராகவும் வாழ்ந்துவந்தார்.

உலகிமல் பிறந்த அனைவரும் என்றோ ஒருநாள் போய்த்தானெ ஆகவேண்டும் என்னும் விதிக்கேற்ப தனது 82வது அகவையில் இவ்வுலகை நீத்து விண்ணகம் சென்ற அவர் நற்கதி அடைவது திண்ணமே.

தான் வாழும் பகாலத்தில் அன்பான மணைவி, பாசமுள்ள மகள் மருமகன் என்றும் துணை நிற்கும் உறவினர் உலகத்தார் என அவர் வாழ்ந்த வாழ்வு பூரணமான வாழ்வே.

வைய்யத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்

உறையும் தெய்வத்த்துள் வைக்கப்படும் - குறள்